www/vasanthakeetham.blogspot.com

www/vasanthakeetham.blogspot.com
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

polikandy

Thursday, January 6, 2011

வாழமறுக்கும் வாலிபனே..

வாலிபம் அடைந்தும்
வாழ்கை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
வாழ மறுக்கும் வாலிபனே..
குறுகிய ஆயுளுள்
குறைவில்லா இன்பம் பெற
குற்றமற்ற திருமண மாலையை
குனிந்து நீயும் ஏற்கமறுப்பதேன்
தித்திக்கும் பூந்தோட்டம்
திருமணம்
திகைப்பூட்டும் இன்பங்கள்
தீர்க்க தரிசனம்
மலரும் வாழ்க்கைக்கு
மழலைகள் இலக்கணம்
மலர்ச்சி அடைவது
மாந்தர்கழகு...
வயோதிபம் உன்னை வரவேற்க
வாலிபம் உனக்கு விடைகொடுக்க
வயதைத்தொலைத்த
வறியவனாகி
வெறுமை கொண்ட
வாழ்கையில் ஏது பயன்..
இன்று வாழா வாழ்கைக்காய்
இறுதிநாளின்
இன்னல்தீர்க்க
இன்றே துணிந்து
இயற்றிடு வாழ்வை...

No comments:

Post a Comment