www/vasanthakeetham.blogspot.com

www/vasanthakeetham.blogspot.com
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

polikandy

Thursday, January 6, 2011


உன் நினைவுகளே என் வாழ்க்கை!!!!

உன் நினைவுகளே 
என் வாழ்க்கை 
ஒரு உள்ளத்தின் ஓசை 
உண்மையாக நேசித்திருந்தால் 
உள்ளத்தின் ஓசையை 
                                  உணா்ந்திருப்பாய் நீயும்..

உனக்காகநான் உயிர் வாழ்கிறேன்.....



அன்பை உணர்ந்தேன்....
உன் பெயராலே
உன் பெயர் சொல்லும் போதே
உள் நெஞ்சம் துள்ளுதே
அன்பினை அள்ளிதந்தாய்
தாய்மையின் சாயலில்
உணர்வுகளுக்கு உயிரானாய்
உண்மையின் உருவானாய்
உயிருக்கு உயிரானாய்....
உன்னால்தான் உயிர் வாழ்கிறேன்....
உனக்காகநான்  உயிர் வாழ்கிறேன்...

ஏழையின் காதல்


அன்பே  என் காதலுக்கு
கண்கள் இல்லை
ஆனால்   கண்ணீர் உண்டு
அதுவும் நீ தந்து போனது
நீ என்னை விரும்பி
வந்தாலும் வெறுத்து  போனாலும்
நீ வாழ்க நலமாக
நான் உன்னை கண்ட
அந்த நொடி  முதல் 
இந்த உலகம் முடியும் வரை
உன் நினைவுகள் மாத்திரம்
என்னுள் உயிர் வாழுமம்மா..
நீ என்னை விரும்பாத போதும்
நான் உன்னை  விரும்பும் 
அந்த ஒரு தலை காதலுடன்
என் ஆயுள் வரை
வாழ்ந்து விடுவேனம்மா.

மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
என் தேவதையே நீ
ஏழையாக பிறந்து விடு
உன்னை இந்த ஏழையின்
காதல் நிஜமாக தேடி வரும்
நீ வாழ்வது பண அடுக்கின் உச்சியில்
நான் வாழ்வதோ  பனைமர
ஓலை குடிசையீன் மத்தியில்
உன் பார்வைக்கு விளங்காது
என் காதல் இருந்தும் வசதி கொண்டவனை 
மணமுடித்து நீ வாழ்த்திடு நலமாக
இன்னொரு ஜென்மத்தில் நீ
ஏழையாக பிறக்கும் வரை
காத்திருக்கும் இந்த ஏழையின்  காதல். 

எம் சொத்துக்கள்...!



பசுமையின் உள்ளங்கள்
பரதவிக்கும் நெஞ்சங்கள்
பெற்றோரை இழந்திங்கு
பதைபதைக்கும் பிஞ்சுகள்...!
சொந்தங்கள் தானுமில்லை
சுகபோகம் தானுமில்லை
காப்பகமும் தானுமின்றி
தத்தளிக்கும் முத்துக்கள்...!
மண்ணுக்கும் விலையுண்டு
மரத்திற்கும் விலையுண்டு
தண்ணீற்கும் விலையுண்டு
எம் கண்ணீற்கு விலையுண்டோ..?
என ஏங்கும் மதிப்பில்லா
விலைபெற்ற  எம்  சொத்துக்கள்..

No comments:

Post a Comment