
மலர்மீதிருந்து மணம்வேறுசென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீதிருந்து உணர்வென்னும்தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்
உளமீதிருந்து உணர்வென்னும்தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்
அலைமீதிருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்றபோதும்
கலைமீதுகொண்ட எனதாசைஎன்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
அசைந்தோடி பிரிகின்றபோதும்
கலைமீதுகொண்ட எனதாசைஎன்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தொலைவானிலுள்ள நிலவானதொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையானமைந்தர் மனஉறுதியென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையானமைந்தர் மனஉறுதியென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
தலைமீது மின்னல் இடியாகிதுன்பம்
ஒருதாகிவிழுகின்றபோதும்
உருவாகுமீழம் எனும்ஆசைநெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
ஒருதாகிவிழுகின்றபோதும்
உருவாகுமீழம் எனும்ஆசைநெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
மலையானதொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும்போதும்
உருவாகும் ஈழம் ஒருசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
புகும்பாதை தடைசெய்யும்போதும்
உருவாகும் ஈழம் ஒருசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
No comments:
Post a Comment