www/vasanthakeetham.blogspot.com

www/vasanthakeetham.blogspot.com
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

polikandy

Thursday, January 6, 2011


மலர்மீதிருந்து மணம்வேறுசென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீதிருந்து உணர்வென்னும்தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்
அலைமீதிருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்றபோதும்
கலைமீதுகொண்ட எனதாசைஎன்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தொலைவானிலுள்ள நிலவானதொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையானமைந்தர் மனஉறுதியென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
தலைமீது மின்னல் இடியாகிதுன்பம்
ஒருதாகிவிழுகின்றபோதும்
உருவாகுமீழம் எனும்ஆசைநெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
மலையானதொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும்போதும்
உருவாகும் ஈழம் ஒருசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

No comments:

Post a Comment